ஜனாதிபதியின் பிரசாரத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துவிட்டு, மீண்டும் கட்சிக்கு செல்லப்போகின்றேன் – முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும், தாம் ஏற்கத் தயார் என அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பிரசாரத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துவிட்டு, மீண்டும் கட்சிக்கு செல்லப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அத்துகோரள தெரிவித்துள்ளார்