சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரை சந்திக்கவுள்ள ஜனாதிபதி

பொலிஸ் மா அதிபர் தொடர்பான பிரச்சினை ஒரு வாரத்தில் தீர்க்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் நிமித்தம், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும், செப்டம்பரில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.