காட்டுத் தீயினால் மூன்று ஏக்கர் நாசம்!

article_1433392603-14

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ காரணமாக 3 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இரவு 9 மணியளவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.