அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவோம் –

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான மே தினக் கூட்டம் இம்முறை கண்டி மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. பாரியளவிலான ஆதரவாளர்களை இக்கூட்டத்தில் பங்குபற்றச் செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவினால் தீர்க்கப்படவேண்டிய விடயமாகும். எம்மால் எதனையும் செய்ய முடியாது.

அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவோம்.

குறித்த சட்டமூலத்தில் நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் காணப்பட்டால், அது குறித்த திருத்தங்களை மேன்முறையீடு செய்வோம்.

குறித்த சட்டமூலத்தில் காணப்படும் விடயங்கள் தொடர்பில் முழுமையாக ஆராயாமல், அதனை முழுமையாக எதிர்ப்பதா, இல்லையா என்பதை கூற முடியாது.

சுதந்திர கட்சியின் சட்டத்தரணிகள் குழாமிடமிருந்து இது குறித்த அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம் என்றார்.