இரத்தத்தில் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்

துளசிக்கு மருத்துவ குணம் அதிகம் என்பது அறிந்ததே. சிறந்த ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகவும், இன்சுலின் உணர்திறனை அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கக்கூடியதாகவும் விளங்குகிறது. .இதை வெறும் வயிற்றில் சாறாகவும் அல்லது இலைகளாகவும் (3 – 4) எடுத்துக் கொள்ளலாம். கற்றாழை உடலில் உள்ள நச்சுக்களை கற்றாழை நீக்குகிறது. ஒவ்வொரு முறை உணவு உண்பதற்குமுன், அதன் கஞ்சி போன்ற சத்தான பகுதியை உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. நெல்லிக்காய் உடல்நலனை காக்கும் சிறப்புமிக்க மூலிகை நெல்லி ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின்-சி உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.

அஸ்வகந்தா சர்க்கரை அளவை குறைப்பதில் அஸ்வகந்தா சிறந்து விளங்குவதோடு உடல் ஊட்டத்திற்கு சிறந்ததாக விளங்குகிறது. வேங்கை வேங்கை மரத்தின் பட்டையை பொடியாக்கி மருந்தாக உபயோகப்படுத்தலாம். ரத்தத்தில் சர்க்கரைைய குறைக்கும் இயல்பு வேங்கையில் உள்ளது. வில்வம் உலர்ந்த வில்வ இலையை கொண்டு செய்த பொடி இயல்பாகவே ரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆவாரை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மற்ற மூலிகைப் போல ஆவாரையும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். பொதுவாக இது தோல் பிரச்சினைக்கும் மருந்தாகிறது.. ஆவாரை வேரை பொடித்து உண்பதன் மூலம் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தலாம்.