இன்று நாடாளுமன்றிற்கு விஜயம் செய்து சபை நடவடிக்கைகளை அவதானித்த ஜனாதிபதி

*ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முகநூலிலிருந்து…

இன்று காலை நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்து சபை அமர்வினை அவதானித்தேன்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு நான் சென்ற போது – சபை முதல்வர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் என்னை வரவேற்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற சபா மண்டபத்துக்கு என்னுடன் வருகை தந்தனர்.

சபா மண்டபத்தில் அமர்ந்திருந்து – நிலையியற் கட்டளையின் கீழ் முன்வைக்கப்பட்டிருந்த வாய்மூல கேள்விகளை நான் செவிமடுத்த பின்னர்,

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எனது செயலகத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடினேன்.