கொவிட் தொற்றினால் மரணித்த முஸ்லீம்களின் ஜனாஸாக்கள் இறுதி தீர்மானம் கிடைக்கும் வரை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில்..

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1608564127720"}

கொவிட் 19 தொற்று ஏற்பட்ட சடலங்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து நிச்சமான தீர்மானம் ஒன்று பெற்றுக் கொடுக்கும் வரை குறித்த சடலங்களை குளிரூட்டப்பட்ட கொள்கலனில் வைக்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்படுவதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு, களுத்துறை, கண்டி, நீர்க்கொழும்பு ஆகிய பிரதான சட்ட வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கும் சடலங்களை வைத்திருக்கக்கூடிய குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை பெற்றுத்தருமாறு குறித்த கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு பிரதான சட்டவைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன் வழங்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சடலங்கள் வைக்கப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.