பசிலுக்கு பிணை கோரி மூன்று மனுக்கள் தாக்கல் !

basil

நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட பிணை மனு உத்தரவை இரத்துசெய்து,  சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 திவிநெகும திணைக்களத்துக்கான நிதியை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த மூன்று மனுக்களையும் ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன, வழக்கின் பிரதிவாதிகளான சட்டமா அதிபர் மற்றும் நிதிக் குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோரை எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.