நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளின் கவனத்திற்கு…!

சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளது.

அந்தவகையில் இலங்கை மதுவரித்தினைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்றைய தினம் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிய 900 க்கும் அதிகமாக அதிகாரிகளை சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.