கிராமத்துக்கோர் குடிநீர் விநியோகத்திட்டம் ஆரம்பம்!

அசாஹிம்
மீள் குடியேற்றக்கிராமங்கலுக்கான கிராமத்துக்கோர் குடிநீர் திட்டம் என்ற எண்ணக்கருவின் கீழ் முதலாவது பாரிய கிணறு அமைக்கும் நிகழ்வு இன்று (30.05.2015) அரபா நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஈகார்ட்ஸ் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கமைய ஐ.எஸ்.ஆர்.சீ நிறுவனத்தின் நிதியுதவியில் மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் தவிசாளர் ஏ.எல்.ஜுனைட் நளீமி, ஐ.எஸ்.ஆர்.சீ நிறுவன பணிப்பாளர் மிஹ்ளார்  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயளாலர் திருமதி நிஹாரா மெளஜூத், காணி உத்தியோகத்தர் ஷபீக், கிராம அபிவிருத்தி சங்க உருப்பினர்கள்  என பலரும் கலந்து கொண்டனர். 
11120530_830995266982229_1170069469_n_Fotor 11303466_830995263648896_1974661729_n_Fotor