கல்முனை பிரச்சினைக்கு ACMC தலைவர் சொல்லும் தீர்வு

 

ஊடகப்பிரிவு

 

 

கல்முனையிலேயேஏட்டிக்குப்போட்டியாகஉண்ணாவிரதத்திலும், சத்தியாக்கிரகத்திலும்ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்களும் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம்பிரச்சினைக்கு தீர்வுகாணமுன்வருமாறு முன்னாள்அமைச்சரும், அகில இலங்கைமக்கள் காங்கிரஸின்தலைவருமான ரிஷாத் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.

file image

 

பாராளுமன்றில் இன்று (21) மாலை உரையாற்றிய அவர்மேலும் கூறியதாவது ;

https://www.facebook.com/483381705154183/posts/1304745049684507?s=1584180337&v=e&sfns=mo

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்தலைவர் சம்பந்தன் ஐயாவும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்ரவூப் ஹக்கீமும் ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்க்க வேண்டியவிடயத்தை அல்லது முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்றஉறுப்பினர் ஹரீஸும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனும் இணைந்துபேசித் தீர்க்க வேண்டியவிடயத்தை. வேறு எவரினதோகையில் இப்போது கொடுத்துள்ளனர்.

 

அவசர காலச் சட்டத்தைபயன்படுத்தி மதகுரு ஒருவர்கல்முனையில் உண்ணாவிரதம்இருக்கின்றார். இன்னுமொரு மதகுரு இதனை தீர்த்து வைப்பதாகக் கூறி  கல்முனைக்குசெல்கின்றார். 

 

100 அடிக்கு இடைவெளிக்குள்இவ்விரண்டு சமூகங்களும் இருந்து தமது நியாயங்களைஎடுத்துரைக்கும் நிலையைபார்க்கும் போது, எனக்கு மிகவும்வேதனையாக இருக்கின்றது. 

 

இரண்டு தரப்பும்போராட்டங்களை கைவிட்டுதத்தமது சமூகங்களின்பிரதிநிதிகளை உள்ளடக்கியவகையிலான சுமூகமானபேச்சுவார்த்தை ஒன்றின் மூலம்இந்தப் பிரச்சினைக்குநிரந்தரமான தீர்வைக்கானஒன்றுபடுமாறு நான் வேண்டுகோள்விடுக்கின்றேன். மற்றுமொருவருக்கு இந்தபிரச்சினையை கொடுத்து நீங்கள்தீர்வுகாண விழையும் விதமானதுஇந்த நாட்டிலேயேசிறுபான்மையினருக்குஎதிர்காலத்தில் பாதிப்பைஏற்படுத்தும் என்பதையும் அது ஒரு பிழையான முன்மாதிரி என்பதையும் நீங்கள் மறந்து விட வேண்டாம்.