பிரதமர் பதவிக்கு தான் தகுதியானவன் என்கின்றார் அமைச்சர் ஜோன்

 பிரதமர் பதவிக்கு தான் தகுதியானவர் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.எனினும், பிரதமர் பதவியை தான் ஒருபோதும் கேட்கப் போவதில்லை என தெரிவித்துள்ள அவர், அவ்வாறு தந்தாலும் அதனை ஏற்கப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
 வத்தளை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக உள்ள சிரேஷ்ட அமைச்சர் நான்தான். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக அதிக ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றேன்.
 இந்நிலையில், பிரதமர் பதவிக்கு தான் தகுதியானவர் என குறிப்பிட்டுள்ள அவர், தான் ஒருபோதும் பிரதமர் பதவியை கேட்கப் போவதில்லை” எனவும் கூறியுள்ளார்.