இன்றைய அமைச்சர்கள் நாளைய புதிய அமைச்சரவையில் தங்கள் பதவிகளை இழக்கலாம் ?

அமைச்சரவையில் மாற்றங்கள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இன்றைய அமைச்சர் நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருக்கலாம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்திய தூதரகம் வழங்கியுள்ள 300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக இந்த வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் அமைச்சரவை மாற்றம் ஏற்படுத்தப்படும் என நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு அமைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் நோக்கம்.கடந்த காலத்தில் அமைச்சர்களின் செயற்பாடுகளை கவனத்தில் கொண்டு அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.