பாராளுமன்றத்தில் இன்று மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணிவரையில் விவாதம்

பாராளுமன்றத்தில் இன்று மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணிவரையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குறித்து விவாதிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தார். 

அந்த வேண்டுகோளை தொடர்ந்து சபையில் அசாதாரண நிலைமையொன்று ஏற்பட்டு பாராளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடத்தப்பட்டது. 

அக்கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டை தொடர்ந்தே மூன்று மணிநேரம் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குறித்து விவாதிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.