பண்டாரநாயக்க கொள்கைகளை அழிக்க புதிய கட்சியை ஆரம்பித்தவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

பண்டாரநாயக்க கொள்கைகளை அழிக்க புதிய கட்சியை ஆரம்பித்தவர்கள், அந்த கொள்கைகளை பாதுகாப்பதாக அரசியல் மேடைகளில் உரையாற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களனியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். புதிய கட்சி ஊழல்வாதிகளை பாதுகாப்பதையே செய்கிறது. ஒரு குடும்பத்தை பாதுகாக்க ஆரம்பிக்கப்பட்ட கட்சி. அந்த கட்சியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பெரிய ஊழல்வாதிகள். தவறாக அங்கு சென்று அங்கிருந்து வெளியேற முடியாத நல்லவர்கள் சிலரும் அங்கு இருக்கின்றனர்.

எனினும் அங்கு ஒரு குடும்பமே அதிகாரத்தை பிரயோகித்து வருகிறது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.