எமது குடியுரிமையை பறித்து இவர்களால் எங்களின் பயணத்தை நிறுத்த முடியுமா ? மஹிந்த கேள்வி

குடியுரிமையை பறிப்பதன் மூலம் தனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எம்மை சிறையில் அடைத்து, எமது குடியுரிமையை பறித்து இவர்களால் எங்களின் பயணத்தை நிறுத்த முடியுமா. தமது நீதிபதிகளை கொண்டு வழக்காடுவோம் என்றும் அவர் கூறுகிறார்.

அமைச்சரவையே தற்போது வழக்குகளை விசாரிக்கின்றது.மற்றையவர் தனது பதவிக் காலத்தை ஆறு ஆண்டு மாற்ற முனைந்து அதனை 5 ஆக மாற்றிக்கொண்டுள்ளன. அடுத்த ஆண்டு அவர் வீட்டுக்கு செல்ல வேண்டும். அப்போது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதுதான் உண்மை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்