தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இரண்டு இலட்சம் ரூபா கறப்பு – புத்தளம்வாசியின் ஜில்மல் !!

கொழும்பு -04 காலி வீதி என்ற முகவரியைச் சேர்ந்தவரும் புத்தளம் பிர தேசத்தில் வசித்து வருபவரும் ஊடகவியலாளர் என்று அறியப்பட்டவருமான ஏ.யூ.எம்.மௌபீர் என்பவருக்கெதிராக நேற்று முன்தினம் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.

 தொழில் வாய்ப்பொன்றைப் பெற்றுத் தருவதாகக் கூறி அக்கரைப்பற்றைச் சேர்ந்த சரிப்தீன் என்பவரிடமிருந்து 2016ம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி அமானா வங்கியூடாக இரண்டு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு இதுவரை பேசியபடி நடந்து கொள்ளவில்லை என்றும், தன்னிடமிருந்து பெற்ற பணத்தை மீள அளிக்கவில்லை என்றும் தனது பணத்தைப் பெற்றுத்தரஉதவுமாறும் கோரியுள்ளார்.

இது தொடர்பாக சரிப்தீன் ஊடகங்களுக்குத் தகவல் தருகையில்;

குறித்த நபரிடம் பணம் வழங்கியதற்கான வங்கி பணம் கட்டும் துண்டு (சிலிப்), குரல் ஒலிப்பதிவுகள் மற்றும் ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

குறித்த நபர் உரியவரின் பணத்தை வழங்காத பட்சத்தில் ஆவணங்களை வெளியிடவும் தயாராக உள்ளோம் !!