கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இன்று மீண்டும் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்

FILE IMAGE
இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்ட 20 இந்திய மீனவர்கள் இன்று மீண்டும் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
FILE IMAGE
 இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் இந்திய மீனவர்களை இந்திய கரையோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்ததாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான சீ.ஜீ.404 ரோந்து படகில் அழைத்துச் செல்லப்பட்ட இந்திய மீனவர்கள், இன்று மதியம் காங்கேசன்துறைக்கு வடக்கில் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கரையோர பாதுகாப்பு படையின் அமோயா கப்பலில் வந்த இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.