உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.கடந்த ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் தோற்றியிருந்தனர்.

மேலும், 77 ஆயிரத்து 284 தனியார் பரீட்சார்த்திகளும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.