தடையை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள இலங்கை ஜனாதிபதி

இலங்கையின் தேயிலை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.இந்தத் தற்காலிகத் தடை நாளை (18) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த தடையை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.