சம்பந்தன், மாவை மற்றும் சுமந்திரன் ஆகியோர் அரசியலில் இருந்து விலகினினால் தான் தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்படும்

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் அரசியலில் இருந்து விலகினால்தான், தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
 யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி,ஆர்.எல்.எவ் மற்றும் சிறு சிறு கட்சிகள் ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.