பொறியியல் துறைக்கு தெரிவாகி தான் கற்ற பாடசாலைக்கு பெருமை சேர்த்த IN .தானிஸ் அஹமத்

 

இலங்கை உயர் கல்வி அமைச்சின் தெரிவில்  ராஜீவ்காந்தி புலமைப் பரிசில் பெற்று பொறியியல் துறைக்கு அக் /அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரி (தே .பா) ஐச் சேர்ந்த மாணவன் IN .தானிஸ் அஹமத் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற பொறியியல் கல்லூரியான National Institute of Technology Rourkela இற்கு தெரிவாகியுள்ளார். இக்கல்லூரியானது உலகளாவிய ரீதியில் 1652 ஆம் இடத்திலும், இந்தியாவிலுள்ள 3345 பொறியியல் கல்லூரிகளில் 12 ஆம் இடத்திலும் உள்ளது. எமது நாட்டிலுள்ள மிகப் பிரசித்தி பெற்ற மொரட்டுவ பல்கலைக்கழகமானது 2870 ஆவது இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

இவர் அக்கரைப்பற்று 6 ஐச் சேர்ந்த ஐனுல் நிசார் – ஜெஸீமா தம்பதிகளின் ஏக புதல்வராவார். அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரியில் ஆங்கிலப் பிரிவில் கல்வி பயின்ற மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய எதிர்கால இலட்சியம் மேலும் சிறப்பாக வெற்றியடைய நாமும் எமது இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்..!