புனித நகரமான வாடிகனில் சிகரெட் விற்பனைக்கு தடை – போப் ஆண்டவர் பிரான்சிஸ் உத்தரவு

இத்தாலியில் உள்ள வாடிகன் நகரம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக திகழ்கிறது. இது போப் ஆண்டவரின் ஆளுமையின் கீழ் உள்ளது.

அங்கு தினமும் லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இங்கு சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கான உத்தரவை போப் ஆண்டவர் பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார். புனித நகரமான வாடிகனில் மக்களின் உடல்நலம் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

சிகரெட் பிடிப்பதால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. மேலும் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஒரு புத்தகத்தில் வாடிகனில் ஆண்டொன்றுக்கு ரூ.72 கோடி மதிப்பிலான சிகரெட் விற்பனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதை கருத்தில் கொண்டு இத்தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் வாடிகனில் ஆண்டொன்றுக்கு ரூ.72 கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.