கீதா குமாரசிங்கவை நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது : சபாநாயகர் கரு

நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற வளாகத்துக்குள் பிரவேசிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தடை விதித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு கீதா குமாரசிங்க தகுதியற்றவர் என்று கடந்தவாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.நீதிமன்றம் வழங்கிய தீரப்பானது, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நேற்று முறைப்படி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்தே, கீதா குமாரசிங்கவை நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.