உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐ. தே. கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை: ஸ்ரீ ல.சு.கட்சி அறிவிப்பு

அடுத்து நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பிலான ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின அமைச்சர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மட்டத்திலான கூட்டமொன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில்இடம்பெற்றது.இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.அடுத்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுதியான கூட்டணியுடன் களமிறங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.