கல்கிசையில் மியன்மார் அகதிகளை அச்சுறுத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்…

 

கல்கிசை பகுதியில் வைத்து, மியன்மார் அகதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

அண்மையில், கல்கிசை பகுதியில் மியன்மார் அகதிகள் தங்கியிருந்த வீடொன்றை முற்றுகையிட்ட சிலர், அங்கு குழப்ப நிலையை ஏற்படுத்தினர். 

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். 

இதன்படி, சந்தேகநபர்களை கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.