யோஷித ராஜபக்ச இத்தாலி செல்ல கொழும்பு நீதிமன்றம் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவிற்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 12 ஆம் திகதி வரை இரண்டு வாரங்கள் இத்தாலி செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தனிப்பட்ட விடயத்திற்காக இத்தாலி செல்வதற்கு அனுமதி வழங்குமாறு யோஷித ராஜபக்சவின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த அனுமதியை வழங்கிய மேல் நீதிமன்றம், கடுவலை நீதவானுக்கு அறிவித்து, கடவுச்சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சி.எஸ்.என் தொலைக்காட்சி சேவையை ஆரம்பிப்பதற்கு எவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டது என்பது தொடர்பிலான தகவலை வெளிப்படுத்தாமை தொடர்பில் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் யோஷித ராஜபக்ச மேல் நீதிமன்றில் பிணை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.