Home அரசியல் இணைந்த வட,கிழக்கில் சமஷ்டி மற்றும் செனட் சபை ஆகியவை அவசியம் TNA முன்மொழிவு

இணைந்த வட,கிழக்கில் சமஷ்டி மற்றும் செனட் சபை ஆகியவை அவசியம் TNA முன்மொழிவு

 இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவ­சியம் என்றும்  மத்­தியில்  பகி­ரப்­பட்ட  அதி­கா­ரத்தை மீளப்­பெ­றா­த­ வ­கையில்  இரண்டாம் தர சபை­யாக  மாகாண பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­ள­டக்­கிய  செனட் சபை அமைக்­கப்­பட வேண்டும் எனவும்  வலி­யு­றுத்தி  அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு­விற்கு இடைக்­கால  பின்­னி­ணைப்பு  முன்­மொ­ழி­வினை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  சமர்ப்­பித்­துள்­ளது. 

அர­சியல் யாப்பு சபையின்  வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­னரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான  இரா. சம்­பந்தன், வழி­ந­டத்தல் குழு உறுப்­பி­னரும் கூட்­ட­மைப்பின் பேச்­ச­ளா­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் கையொப்­ப­மிட்டு இந்த பின்­னி­ணைப்பு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 

இது குறித்து  நேற்று நடை­பெற்ற  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்தில்   எடுத்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன்   இந்த விடயம் குறித்து  விளக்கம் அளித்­துள்ளார்.

கூட்­ட­மைப்பு சமர்ப்­பித்­துள்ள பின்­னி­ணைப்பு  முன்­மொ­ழிவின்   வடக்கு, கிழக்கு  இணைந்த  சமஷ்டித் தீர்வு  அவ­சி­ய­மாகும். மத்­தியில் பகி­ரப்­படும் அதி­காரம் மீளப்­பெ­றப்­ப­டா­த ­வ­கையில்   மாகாண  பிர­தி­நி­தித்­து­வத்தை   உள்­ள­டக்­கிய வகையில்  இரண்டாம் தர சபை­யாக செனட் சபை  அமைக்­கப்­ப­ட­வேண்டும்.  உச்­ச­நீ­தி­மன்­றத்தின்  மீயுயர்  தன்மை பாதிக்­கப்­ப­டா­த­வ­கையில்   அர­சியல் அமைப்பு  நீதி­மன்றம்  உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். சமயம் சம்­பந்­த­மாக சமத்­து­வ­மான நிலைமை  பேணப்­ப­ட­வேண்டும் என்றும்  யோசனை  முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. 

இத்­த­கைய விட­யங்­களை உள்­ள­டக்கி இடைக்­கால வரைபு  உறுதி செய்­யப்­படும் பட்­சத்தில்  நியா­யத்­தன்மை  பேணப்­பட்டால்  அந்த வரைபை கூட்­ட­மைப்பு சாத­க­மாக பரி­சீ­லிக்கும் என்றும்  இந்தப் பின்­னி­ணைப்பில் கூறப்­பட்­டுள்­ளது.