புங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேகநபர்கள் விசேட நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவர் – ஜனாதிபதி

Maithripala-Sirisena

புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விசேட நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விரைவில் நீதியை நிலைநாட்டுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்

யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி 17 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை இன்று வேம்படி மகளிர் கல்லூரியில் சந்தித்தபோதே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்