விஜயதாச பதவி விலகும் விவகாரம் – ஐ.தே.க. கடிதத்துக்கு ஜனாதிபதி அனுமதி

விஜயதாச ராஜபக்ஸவின் அமைச்சரவையில் வகிக்கும் அமைச்சுப் பதவி உள்ளிட்ட அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். 

அதன்படி விஜயதாச ராஜபக்ஸவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தினால் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக கூறினார். 

அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவில், விஜயதாஸ ராஜபக்‌ஷ அமைச்சரவை தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுவதன் காரணமாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் அமைச்சரவை அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் நேற்று கோரியிருந்தது.