சுயகௌரவம் இருக்குமேயானால் விஜயதாஸ உடனடியாகப் பதவி விலக வேண்டும் : சரத் பொன்சேகா

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

விஜயதாஸ ராஜபக்ச ஊழல்வாதிகளையும், மோசடியாளர்களையும் காப்பாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குற்றம் செய்தவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வருவதற்குத் தடையாக இருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் ஆளாகியிருக்கின்றார். அவர் இந்தப் பதவியை விட்டு விலகினால் மட்டுமே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, அவருக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.