பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியை கற்பது காலத்தின் தேவை :சபாநாயகர் கருஜயசூரிய

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியை கற்பது காலத்தின் காலத்திற்கு ஏற்ற தேவை என்று சபாநாயகர் கருஜயசூரிய கூறியுள்ளார். 


இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை கட்டியெழுப்புதல் போன்றே நாட்டின் அபிவிருத்திக்கும் அது தேவையானது என்று அவர் கூறியுள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்மொழி பாடநெறியை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சபாநாயகர் இதனைக் கூறினார். 

இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றும் போது, மொழிப் பிரச்சினையை தீர்ப்பதன் ஊடாக தேசிய பிரச்சினையில் குறிப்படத்தக்க அளவு தீர்க்க முடியும் என்று கூறினார்.