பிணை முறிப்பத்திர விவகாரம் போல் சிங்கப்பூர் சூழ்ச்சித் திட்டம் குறித்தும் விசாரிக்க வேண்டும் : மஹிந்த

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் சமயத்தில் சிங்கப்பூரில் உள்ள அர்ஜூன் மகேந்திரனின் வீட்டில் சூழ்ச்சிகள் திட்டமிடப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலையில் உள்ள தனது கால்டன் இல்லத்தில் ஊடகவியலாளரிடம் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் பண கொடுக்கல் வாங்கல்கள் நடந்ததாக பலர் கூறுகின்றனர். இது இரகசியமான விடயமல்ல.

ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் சிங்கப்பூருக்கு சென்றனர். போய் வரும் போது கொண்டு வந்த பைகளில் என்ன இருந்தது என்பது குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

பிணை முறிப்பத்திர விவகாரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு காரணமாக சில விடயங்கள் மக்களுக்கு தெரியவந்துள்ளது.

திறைசேரி பிணை முறிப்பத்திர விவகாரம் போல் சிங்கப்பூர் சூழ்ச்சித் திட்டம் குறித்தும் விசாரிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.