2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தான் தேர்தலை நடத்த முடியும் ? மஹிந்த தேசப்பிரிய

நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபை தேர்தல் மற்றும் மாகா­ண ­சபை தேர்தல் குறித்து அர­சியல் கட்­சி­களின்  செய­லா­ளர்கள் நேற்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வரை சந்­தித்து பேச்­சு­வா­ர்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி, தேசிய சுதந்­திர முன்­னணி, ஈழ மக்கள் ஜன­நா­யக கட்சி, ஜாதிக ஹெல உறு­மய,  மக்கள் விடு­தலை முன்­னணி  உள்­ளிட்ட கட்­சி­களின் பிர­தி­நி­திகள்  நேற்று இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர். நேற்று பிற்­பகல் மூன்று மணிக்கு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த சந்­திப்பு சுமார் ஒன்­றரை மணித்­தி­யா­லங்கள் இடம்­பெற்­றது.

இந்த சந்­திப்பின் போது  நடை­பெ­ற­வுள்ள  தேர்­தல்கள் குறித்து   பொது இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.  குறிப்­பாக அடுத்­த­தாக நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபைத்­தேர்­தலை பொறுத்­த­வ­ரையில் இனியும் காலத்தை கடத்­தாது உட­ன­டி­யாக தேர்தல் தினம் அறி­விக்­கப்­பட வேண்டும் என சந்­திப்பில் கலந்­து­கொண்ட கட்­சி­களின் பிர­தி­நி­திகள் தெரி­வித்­தனர். 

எவ்­வாறு இருப்­பினும் இந்த ஆண்டு டிசம் பர் மாதம் பத்தாம் திக­திக்கு முன்னர் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்கும் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தி­நி­திகள் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளனர். இந்த மாதம் 31 ஆம் திக திக்கு முன்னர் தேர்தல் திருத்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும். அர­சாங்கம் இந்த விட­யத்தில் கால தாம­தத்தை ஏற்­ப­டுத்­தாது என பிர­தி­ய­மைச்­சர்­க­ளான அஜித் பெரேரா, லசந்த அழ­கி­ய­வண்ண ஆகியோர்  சந்­திப்­பின்­போது  தெரி­வித்­துள்­ளனர்.  

 மூன்று மாகா­ண­ச­பை­களின்    கால எல்லை செப்­டெம்பர் மற்றும் ஒக்­டோபர் மாதங்­களில் முடி­வுக்கு வரு­கின்­றது. இது குறித்து  நேற்­றைய சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. கிழக்கு மாகாணம், சப்­ர­க­முவ மாகாணம் மற்றும் வடமேல் மாகா­ணங்­களின் கால எல்லை முடி­வ­டை­கின்ற நிலையில் குறித்த மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தா

அல்­லது சகல மாகா­ண­ ச­பை­களின்  தேர்­த­ல்களையும் ஒரேநேரத்தில் நடத்­து­வதா என இதன்­போது கட்சி பிர­தி­நி­தி­க­ளினால் வின­வப்­பட்­டது. இதன்­போது சகல மாகா­ண ­சபை தேர்­த­ல்களையும் ஒரே தினத்தில் நடத்­து­வது  என்ற நிலைப்­பாட்டில் அர­சாங்கம் உள்­ள­தா­கவும் இந்த விடயம் தொடர்பில் அடுத்த பத்து நாட்க­ளுக்குள் அறி­விக்­கப்­படும் எனவும் பிர­தான கட்­சி­களின் உறுப்­பி­னர்கள் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரிடம் தெரி­வித்­துள்­ளனர். 

இந்­நி­லையில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல்  சட்­ட­மூ­லத்தை குறித்த தினத்தில் அங்­கீ­க­ரிக்க வேண்டும். இந்த சட்­ட­மூலம் சமர்ப்­பிக்கும் தினம் செப்­டெம்பர் வரையில் இழுத்­த­டிக்­கப்­படும் என்றால் இந்த ஆண்டு இறு­திக்குள் தேர்தலை நடத்தவே முடியாது. டிசம்பர் மாதம் சாதாரண தரப்பரீட்சை நடை பெறும் காரணத்தினால் அந்தக் காலப்பகுதியில் தேர் தலை நடத்த இயலாது. அவ்வாறான நிலையில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தேர்தலை நடத்தவேண்டிய நிலைமை வரும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  மஹிந்த தேசப்பிரிய  கட்சி செயலாளர்களு டனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.