முஸ்லிம் கூட்டமைப்பு அரசியலில் பாரிய மாற்றமொன்றினை உருவாக்கும் : ஹசன் அலி

முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள முஸ்லிம் கூட்­ட­மைப்பின் பகி­ரங்க, திறந்த பேச்­சு­வார்த்­தையும், கலந்­து­ரை­யா­டலும் விரைவில் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் வட­கி­ழக்கில் அர­சி­யலில் ஈடு­பட்­டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட அனைத்து முஸ்லிம் கட்­சி­களும் கலந்து கொள்­ளலாம் என ஏற்­பாட்­டா­ள­ரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி பகி­ரங்க அழைப்பு விடுத்­துள்ளார். 

இந்தக் கலந்­து­ரை­யா­டலின் பின்பே கூட்­ட­மைப்பின் யாப்பு வரை­புக்­குட்­ப­டுத்­தப்­படும் என்றும் அவர் கூறினார். 

மேலும் அவர் கருத்து தெரி­விக்­கையில்; ஏற்­க­னவே அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் மற்றும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி ஆகிய கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு கொள்­கை­ய­ளவில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் முஸ்லிம் கூட்­ட­மைப்பில் இணைந்து கொள்­வ­தென்றால் நாம் அதனை வர­வேற்­கிறோம்.

முஸ்லிம் கூட்­ட­மைப்­புக்கு வட­கி­ழக்கில் பெரும்­பான்­மை­யான மக்கள் பூரண ஆத­ர­வினை வழங்­கி­யுள்­ளார்கள். முஸ்லிம் கூட்டமைப்பு அரசியலில் பாரிய மாற்றமொன்றினை உருவாக்கும் என்ற நம்பிக்கையுண்டு என்றார்.

ஏ.ஆர்.ஏ.பரில்