மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபியா பயணம்!

mlam-hizbullah
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  இன்று 25 திங்கட்கிழமை மதியம் சவூதி அரேபிய நாட்டுக்கு பயணமானார்.
ராபிததுல் ஆலமுல் இஸ்லாமி அமைப்பினுடனான கலந்துரையாடலில்  கலந்து கொள்வதற்காக இன்று சவுதி சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் முதலில் உம்ரா கடமையை நிறைவேற்றிவிட்டு அதன் பின்னர் ராபிததுல் ஆலமுல் இஸ்லாமி அமைப்பின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லாஹ் அஸ் ஷிர்கியையும் ,சர்வதேச இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியினுடைய தலைவர்,முஸ்லிம் சமய கலாசார வக்பு அமைச்சினுடைய பிரதிநிதிகள்,உயர் கல்வி அமைச்சினுடைய பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ரியாத் இமாம் சுஊத் பல்கலைக்கழகத்துடன் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியை இணைந்து செயற்படுவதற்கான உடன்படிக்கைகளிலும் இதன் போது ரியாத் பல்கலைக்கழகத்தில் கைச்சாத்திடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மேற்படி விஜயத்தில் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனுடைய பல நடவடிக்கை தொடர்பாகவும் இந்த விஜயத்தின் போது பல்வேறுபட்ட தலைவர்களுடனும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் கலந்துரையாடவுள்ளார்.
சவூதி அரேபிய நாட்டுக்கு சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இரண்டு வாரம் சவூதியில் தங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.