வடக்கு லண்டனின் ஃபின்ஸ்பரி பார்க் தாக்குதலுக்கு தெரேசா மே கடும் கண்டனம்

வடக்கு லண்டனின் ஃபின்ஸ்பரி பார்க் பகுதியில் இன்று பாதசாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இது போன்ற தருணத்தில் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தினால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.