பாராளுமன்ற முஸ்லீம் பிரதிநிதிகள் – பிரதமர் விரைவில் சந்திப்பு..?

பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை அவ­ச­ர­மாகச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னத்­துள்­ளனர்.

நாட்டில் தற்போது முஸ்­லிம்­களுக்கு எதி­ராக இடம்­பெற்­று­வரும் அசா­தா­ரண சம்­ப­வங்கள் தொடர்­பி­லேய பிர­த­மரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர்.

பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்பு நேற்­று­முன்­தினம் மாலை பாரா­ளு­மன்றக் கட்­ட­டத்­தொ­கு­தியில் நடை­பெற்­றது.

அதன்­போதே குறித்த தீர்­மா­னத்­திற்கு வந்­துள்­ளனர். அச்­சந்­திப்பில் நல்­லாட்­சியில் முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் நெருக்­க­டிகள் குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­ட­துடன் அதனைத் தடுப்­ப­தற்­கான விரை­வான நட­வ­டிக்­கைகள் தொடர்­பிலும் கவனம் செலுத்­தப்­பட்­டது.

 மேலும் கடந்த சில மாதங்­க­ளாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெறும் அடா­வ­டித்­த­னங்கள் மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­குதல் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, சட்டம் ஒழங்கு மற்றும் தென்­பி­ராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரத்­னா­யாக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர உள்­ளிட்­டோர்­க­ளுடன் ஏற்­க­னவே நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டது. 

 குறித்த பேச்­சு­வார்த்­தை­களின் போதும் அமைச்­ச­ர­வைக்­கூட்­டங்­க­ளின்­போதும் முஸ்­லிம்கள் மீதான அசம்­பா­வி­தங்­க­ளுக்கு எதி­ராக உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தொடர்ந்து வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­ட­போதும் வினைத்­தி­றன்­மிக்க எவ்­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் பிர­தி­நி­தி­க­ளினால் ஆதங்கம் வெளி­யி­டப்­பட்­டது.

 மேலும் கடந்த ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்க்­கப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்களை அடி­கோ­லாகக் கொண்டு ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்­கமும் முஸ்­லிம்கள் விவ­கா­ரத்தில் கடந்த  ஆட்­சியின் பாணி­யினை பின்­பற்­று­வ­தனை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. ஆகவே குறித்த விவ­காரம் தொடர்பில் பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அனை­வரும் ஓர­ணியில் திரண்டு சம­யோ­சி­த­மான முடி­வுக்கு வர வேண்டும் என்­கின்ற அழுத்­த­மான கருத்தும் சில பிர­தி­நி­தி­களால் முன்­வைக்­கப்­பட்­டது.

 எனவே  மருத்­துவப்  பரி­சோ­தனை மற்றும் ஐக்­கிய நாடுகள் சபையின் சமுத்­தி­ரங்கள், சமுத்திரவளங்களின் நிலையான அபிவிருத்தி, செயன்முறைகள் , பாதுகாப்பு தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதுடன் அவரைச் சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.