கோப்பையை வென்ற மும்பை அணிக்கு ரூ.15 கோடி: சென்னைக்கு ரூ.10 கோடி !

 

214141

கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கடந்த 2013-ம் ஆண்டு சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்த வருடமும் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 8 தொடரில் 6 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி 4 முறை பரிதாபமாக தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.15 கோடி பரிசாக வழங்கப்பட்டது. பி.சி.சி.ஐ.செயலாளர் அனுராக் தாகூர் இந்த தொகையை வழங்க மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுக்கொண்டார். இதேபோல் சென்னை அணி கேப்டன் தோனி ரூ.10 கோடியை பெற்றுக்கொண்டார்.