மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்..

39 இலட்சம் ரூபா நிதி மோசடி உள்ளிட்ட மூன்று விடயங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, 20 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் அவரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

மேலும், மஹிந்தானந்தவின் பாஸ்போட்டையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, பிரதிவாதி தரப்பில் ஆட்சேபனைகள் இருப்பின் அதனை ஜூன் 27ம் திகதிக்கு முன்னர் தெரிவிக்குமாறும் நீதவான் இன்று அறிவித்துள்ளார்.