“அமைச்சுப்பதவி தருவதாக ரணில் என்னிடம் கூறினார் “-கெஹெலிய

imagesகடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தால் அமைச்சுப்பதவி தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் கேட்டதாக  முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை தொடர்பு கொண்ட பிரதமர், 26 ஸ்ரீல.சு.க. உறுப்பினர்களுடன் அரசாங்கத்திலிருந்து விலகினால் தனக்கு அமைச்சு பதவி தருவதாக தெரிவித்தார் என கெஹெலிய தெரிவித்துள்ளார்.