மாலைதீவு முதலீட்டாளர்கள் கிழக்குக்கு வருகை..!

முதலமைச்சர் ஊடகப்பிரிவு 
கிழக்கு மாகாணத்தில் தனியார் நிறுவனங்களை அமைத்து அதன் மூலம்  கல்வியை தொடர முடியாமல் ஏழ்மை நிலையில் இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நோக்கில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்  மேற்கொள்ளும் முயற்சியால் மாலை தீவு, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து 12 பேர் கொண்ட குழுவினர் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்தனர்.
குறிப்பிட்ட விஜையத்தின் மாலைதீவு முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் முகம்மட் சக்கீல் தலைமையில் 12 பேர்கொண்ட குழுவினர் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாரை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகளை நிறுவும் முகமாக பட இடங்களையும் பார்வையிட்டனர்.
கிழக்கு மாகாணத்தில் இருந்து எந்தப்பெண்களும் வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்லக்கூடாது, அதுபோன்று இளைஞர்கள் சாதாரணத் தொழிலாளியாகச் செல்லக்கூடாது. அவர்கள் அங்கு சென்று மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் தொழில் செய்து ஒவ்வொருமாதமும் பெற்றுக்கொள்ளும் சம்பளத்தினை இலங்கையில் தொழிற்பேட்டைகளை அமைப்பதால் அதில் இருந்து தன் ஊரில், தன்குடும்பத்துடன் இருந்து சந்தோசமாக தொழில் புரிய முடியும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்க்கிணங்க கிழக்கில் பெருமளவிலான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 2000 யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் ஆடைத்தொழிற்சாலையுடன் பயிற்சி  நிலையமும் ஏராவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 
DSC_1799_Fotor DSC_1791_Fotor