பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியா விஜயம்..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

 இவர் இலங்கை விமானசேவைக்கு சொந்தமான யு.எல்.195 விமானத்தில் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயமானது தனிப்பட்ட விஜயமாக அமையவுள்ள நிலையில், நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  மதிய போசனத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்திய வெளியுறவுத்தறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் வெஷாக் பண்டிகை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.