இன்று முதல் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரத்தை மீள செயற்படுத்த எதிர்பார்ப்பு

திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரத்தை இன்று முதல் மீள செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

கடந்த 9ம் திகதி குறித்த இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக, அந்த அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். 

இதேவேளை, நேற்று காலை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரத்திலும் கோளாறு ஏற்பட்டதுடன், அதன் திருத்தப் பணிகள் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.