ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் ஏப்ரல் மாதம் 5 ஆம் திக­திக்கு முன்பு பய­ணத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்

இவ்­வ­ருடம் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திக­திக்கு முன்பு திணைக்­க­ளத்தில் தமது பய­ணத்தை உறுதி செய்து கொள்­ளா­விட்டால் அவர்­க­ளது பதி­வுகள் ஆவ­ணங்­க­ளி­லி­ருந்து நீக்­கப்­படும் என அரச ஹஜ்குழு தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் கருத்து தெரி­விக்­கையில்;
ஹஜ் கட­மைக்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விண்­ணப்­பித்த சுமார் 4 ஆயிரம் பேருக்கு திணைக்­களம், ஹஜ் பய­ணத்தை உறுதி செய்­யும்­படி கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது.

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்றத் திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் ஹஜ் வங்கிக் கணக்­கிற்கு மீள­ளிக்­கப்­படக் கூடிய கட்­ட­ண­மாக 25 ஆயிரம் ரூபாவை வைப்­பி­லிட்டு அந்த வைப்பின் ரசீ­துடன் தனது பய­ணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திக­திக்கு முன்பு 25 ஆயிரம் ரூபா மீள­ளிக்­கப்­ப­டக்­கூ­டிய கட்­ட­ணத்தைச் செலுத்தி தமது பய­ணத்தை உறுதி செய்யத் தவறும் விண்­ணப்­ப­தா­ரி­களின் பதி­வுகள் இரத்துச் செய்­யப்­படும்.

இறுதி நேர சிர­மங்­களைத் தவிர்த்துக் கொள்­வ­தற்கும் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை பிரச்­சி­னை­க­ளின்றி முன்னெடுப்பதற்கும் ஹஜ் விண்ணப்பதாரிகள் ஹஜ் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.