“நீதிமன்ற கட்டடத்தின் மீதான தாக்குதல் உணர்ச்சிவசத்தினால் ஏற்பட்டதாகும் “-சுசில்

susil

யாழ்.நீதி­மன்ற கட்­டடத் தொகு­தி ­மீ­தான தாக்­கு­த­லா­னது உணர்ச்சிவசத்தினால் நடைபெற்ற ஒன்றேயாகும். இது ஆயுதப் போராட்­டத்­திற்கோ அல்­லது புலி­களின் மீள் உரு­வாக்­கத்­திற்கோ வித்திடும் என்று கூறு­வதை தென்­னி­லங்கை மக்கள் நம்­ப­மாட்­டார்கள் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுசில் பிரே­ம­ஜ­யந்த தெரி­வித்தார்.

யாழ்ப்­பா­ணத்­திற்கு நேற்று விஜயம் மேற்­கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுசில் பிரே­ம­ஜ­யந்த யாழ்ப்­பாணம் கோயில்­ வீ­தியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் யாழ்.மாவட்ட அமைப்­பாளர் அங்­கஜன் இரா­ம­நா­தனின் இல்­லத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.
அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

யாழ்.நீதி­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியின் மீதான தாக்­கு­த­லா­னது உணர்­பூர்­வ­மாக ஏற்­பட்ட ஒன்றே. இதனை புலி­களின் மீள்­ உ­ரு­வாக்­க­ம் என்று சொல்­வதில் எந்த அர்த்­தமும் இல்லை. சட்டம் ஒழுங்கை பொலிஸார் பாது­காப்­பார்கள். இதற்கு அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். கடந்த 30 வருட கால­மாக மக்கள் பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்து வரு­கி­றார்கள். தற்­போது அமை­தி­யான சுதந்­தி­ர­மான சூழல் ஏற்­பட்­டுள்­ளது. இதனை குழப்­பாது இருக்க வேண்டும்.

பொலிஸார் சட்ட ஒழுங்கை பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­பார்கள். இது­போன்ற சம்­ப­வங்கள் இனிமேல் நடக்­காது பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் புங்­கு­டு­தீவு மாண­வியின் படு கொலை­யா­னது மிகவும் கண்­டிக்­கத்­தக்­கது. குடும்­பத்­தி­ன­ருக்கு எமது ஆழ்ந்த அனு­ தா­ப­ங்­களை தெரி­விப்­ப­தோடு யாழ்ப்­பா­ணத்தில் மட்­டு­மன்றி முழு இலங்­கை­யிலும் இவ்­வா­றான சம்­பவம் இனி­மேலும் நடை­பெ­றக்­கூ­டாது.

ஜனா­தி­ப­தியை சந்­தித்து புங்குடுதீவு மாண வியான வித்தியாவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு கடும்தண்டனை வழங்குவது தொடர்பாக பரிந் துரைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.