கடற்படையினர் காலி நடவடிக்கை நிலையத்தின் ஊடாக 16 மாதங்களில் மூன்று பில்லியன் ரூபா வருமானம்

வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை அவன்கார்ட் நிறுவனத்திடம் இருந்து கடற்படையினர் பெற்றுக்கொண்ட பின்னர், கடந்த 16 மாதங்களில் மூன்று பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது.

கடற்படையினர் காலி நடவடிக்கை நிலையத்தின் ஊடக இந்த வருமானம் கிடைத்துள்ளது.

காலி நடவடிக்கை நிலையம் 8 ஆயிரத்து 170 கப்பல் பயணங்களுக்கு பாதுகாப்பு வழங்கி இந்த வருமானத்தை ஈட்டியுள்ளது.

வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்குவது அவற்றை மீள களஞ்சியப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மூலம் கடற்படையினர் இந்த வருவாயை ஈட்டியுள்ளனர்.

ஈட்டப்பட்ட வருமானம் அரச கூட்டு கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.