உண்மைக்கு ஒற்றைச் சொல் – வீடியோ ஆதாரம்.

                                                           

பேயோட்டிய பெருந்தலைவன்.-பகுதி 2

RAAZI MUHAMMADH JAABIR

உண்மைக்கு ஒற்றைச் சொல்.புரிய விரும்புபவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பொய்க்குப் பல சொல்.நாக்கைப் புரட்டி,வாக்கைப் புரட்டி,நடத்தையைப் புரட்டி ஏற்றுக்கொள்ளவைக்க வேண்டும்.ஆனால் உண்மைக்கு ஒரு சொல்.ஒரு தரத்திலேயே புரிந்துவிடும்.

இதுவரைக்கும் விரல்களின் ரேகைகள் தேயுமளவிற்கு நான் எழுதியிருக்கிறேன்.உங்கள் கன்னங்களில் உண்மையின் உறுதியான விரல்களைக் ஆழமாய்ப் பதிய அறைந்திருக்கிறேன்.ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கியிருக்கிறேன்.உண்மைகளைப் புரிந்துகொள்ள விரும்பும் போராளிகளுக்கு இவைகள் போதும் என்று நினைக்கிறேன்.

இதுவரைக்கும் ஒருவர் கூட மறுக்கவில்லை.நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு என் முன்னே நின்று ‘எச்சக்காரப் பிச்சைப் பயலே,நீ எத்தனை பொய்கள் சொல்கிறாய்.பத்தரை மாற்றுத் தங்கமடா என் தலைவன் பைத்தியக்காரனே’’ என்று என் கண்முன்னே சொல்வதற்கு காங்கிறசில் யாருமில்லை. தைரியமும் இல்லை.காரணம் அடிமட்டத்தொண்டன் முதல் மேல் மட்ட முதலாளி வரைக்கும் தெரியும் தலைவன் இப்படித்தான் என்று.பொய்யா சொல்கிறேன்.இட்டுக்கதை கட்டி வெட்டிப் பேச்சா பேசுகிறேன்.உண்மையைச் சொல்கிறேன்.அதை உரத்துச் சொல்கிறேன்.எதைச் சொல்லி மறுப்பார்கள் அவர்கள்?

தலைவரின் கீழ் பாதத்தில் சேறுபட்டாலே குனிந்து தன் நாக்குகளால் சப்புக்கொட்டி நக்கிச் சுவைப்பவர்கள் சத்தமில்லாமல் கிடக்கிறார்கள்.உண்மை அவர்களின் உதடுகளை இறுக்கிப் பூட்டியிருக்கிறது.தலைவரின் தலை முடியில் எறும்பு மொய்த்தால் வேட்டரிவாள் கொண்டு வெட்டிவிட்டு இது வெளிநாட்டுச் சதி என்று பக்கம் பக்கமாய் அறிக்கைவிடும் அந்த மாமுனிவர்கள் மௌனத்தவம் இருக்கிறார்கள்.தலைவர் செய்திருக்கும் வேலைகள் அப்படி.எதைச் சொல்லிச் சமாளிப்பார்கள் இனி அவர்கள்.

உங்கள் தலைவர் குமாரியின் பேயை விரட்டினார் என்பதற்கு வீடியோ ஆதாரத்தை இணைத்துள்ளேன்.இது ஒன்று.மஹரகமையில் இருக்கும் நியாஸ் தெய்யோவிடம் சென்றது இன்னொன்று.இலக்கம் வைத்து சாத்திரம் பார்த்தது அடுத்த ஒன்று.ஒவ்வொன்றாய் சொல்வேன் உறைக்கும் வரை.

இன்னும் எத்தனை உண்மைகள் சொன்னால் உங்களுக்கு உறைக்கும்? இந்தப் பூமியில் வாழும் உரிமையைக் கூட எமது இறைவன் அவருக்குக் கொடுக்கவில்லை.எம்மை ஆளும் உரிமையை அவருக்குக் கொடுத்தது யார்?
என் பூமியில் வாழாதே என்று இறைவனே அவருக்குச் சொல்ல,ஆளும் அரசனே என்று அவருக்கு ஆரத்தி எடுக்க மனிதன் எமக்கு என்ன தகுதியிருக்கிறது?அவர் தலையையா கேட்கிறோம்.தலைமைக்குத் தகுதியில்லை.தள்ளிபோய்விடுங்கள் என்கிறோம்.அது புரியாத பேராசைக்காரரா உங்கள் தலைவர்?
போராளிகளே புரிந்துகொள்ளுங்கள்.இவர் தலைமைக்குத் தகுதியில்லாதவர்.பொறுப்புகளுக்குப் பொருத்தமில்லாதவர்.

போராளிகளே உங்கள் போர்வைகளைப் பிரித்து தூக்கத்தைக் கலைத்து எழும்பிவிடுங்கள்.நாளை தூங்குவதற்கு இடமில்லாமல் ஆக்கிவிடுவார் ஹக்கீம்.
ஏன் இன்னும் சொல்பவனின் யோக்கியதையைத் தேடித்தேடி சொன்னவைகளின் உண்மைகளை மறைக்கப்பார்க்கிறீர்கள்.எத்தனை உண்மைகள் இன்னும் வேண்டும் உங்களுக்கு.

‘தலைவன்’ என்றொரு தேனை அருந்திய மயக்கத்தில் கிறங்கிக்கிடக்கும் தொண்டர்களே,

கட்சி இல்லை தலைவர்தான் முக்கியம் என்ற போதையின் புகையில் இருக்கும் போராளிகளே,
தலைவரில்லை கட்சிதான் முக்கியம் என்றொரு முடிவுக்கு வரும் வரைக்கும்

நீங்கள் தூங்கமுடியாதளவு உண்மையைக் கொண்டு உங்களைத் துன்புறுத்திக்கொண்டே இருப்பேன்.
தூக்கத்தில் இருந்து நீங்கள் துள்ளி எழும்பும் வரைக்கும் பேனாவின் நகங்களால் உங்களைப் பிறாண்டிக்கொண்டே இருப்பேன்.

பொய்யின் மஞ்சத்தில் நீங்கள் புரளும்போது உண்மையின் ஊசியைக் கொண்டு உங்களை உராய்ந்து கொண்டே இருப்பேன்.

பொய்யின் தாலாட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் உங்களை உண்மையின் குறட்டையைக் கொண்டு நச்சரித்துக்கொண்டே இருப்பேன்.

இனி உறங்கவே முடியாது என்று நீங்கள் விழிக்கும் வரை.
அதிகாரத்தால் உங்களை அடக்கி,ஒடுக்கி, வைத்திருக்கும் புரூட்டசை உங்களை வைத்தே விரட்டவல்ல அண்டனியை நீங்கள் தேடிக்ககண்டுபிடிக்கும் வரைக்கும்..
ஆம்.உங்கள் வெகுஜனங்களின் விரோதியாகத்தான் நான் போய்விடுவேன்.ஆனால் யதார்த்தவாதி என்ற இன்பத்தில் இறந்தும்விடுவேன்.

இப்போது தன் காதலியின் ஆவியை விரட்ட காபிர்களின் கடவுள்களிடம் தஞ்சம் தேடும் உங்கள் தலைவனின் இன்னொரு முகத்தைக் கண்டு களியுங்கள். தொடரும்…

https://www.facebook.com/lankafrontnews/videos/742686569223694/