வாசு எதற்கும் உதவாத காய்ந்த பூசணிக்காய் போன்றவர் -ரணில்

ranil

 

நாடாளுமன்ற உறுப்பினர் எதற்கும் உதவாத காய்ந்த பூசணிக்காய் போன்றவர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரம் தொடர்பில் நேற்று  பாராளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினரான வாசுதேவ நாணக்காரவுக்கும் இடையிலான வாதத்தின் போது வாசுதேவ நாணயக்கார பிரதமர் ரணில் விக்கிரசிங்க மீது கடுமையான கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தார்.

வாசுதேவ நாணயக்கார எம்.பி “நீ யார் என்னை அமரச்சொல்வதற்கு?” ” நீயா சபாநாயகர்?” ” நீ சபாநாயகர் இல்லை ஒழுங்குப் பிரச்சினையின் நிமித்தமே எழுந்துள்ளேன் பைத்தியக்காரன்” என்று கூறியவாறு கெட்டவார்த்தை ஒன்றையும் மீண்டும் மீண்டும் கூறி நீ உட்காரு ஓய் என்றும் கூறினார். 

இந்நிலையில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடகவியலாளர் ஒருவர் மேற்படி சம்பவம் தொடர்பில் கேள்வியெழுப்பும் போதே பிரதமர் ரணில் விக்கிரம சிங்க இதனைத் தெரிவித்தார்.

வாசுதேவ நாணயக்கார எதற்கும் உதவாக காய்ந்து போன பூசணிக்காய் போன்றவர். தோல்வியை தாங்கி கொள்ள முடியாதமையின் வெளிப்பாடே இதுவாகும் என்றார்.