மக்களை ஒன்று கூட்ட முடியாமல் தோல்வியில் முடிந்த மறைக்கப்படாத உண்மைகள் புத்தக வெளியீடு

(இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா)

நேற்று சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் எனும் புத்தகம் வெளியீடு செய்யப்பட்டிருந்தது.இப் புத்தக வெளியீட்டில் மு.காவின் பிரதி அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.இதற்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல இடங்களில் உள்ளவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதில் ஆரம்பத்தில் மிகச் சொற்பமானவர்களே வருகை தந்துள்ளனர்.இதனையடுத்து தொலை பேசி அழைப்புக்கள் ஏற்படுத்தி கூட்டத்திற்கு கட்டாயப்படுத்தி ஆட்களை கொண்டு வந்த சம்பவங்களும் இடம்பெற்றதான கதைகளும் உள்ளன.அப்போதும் சொல்லுமளவு மக்களை ஒன்று கூட்ட முடியவில்லை.

இப் புத்தக வெளியீட்டின் மீது மக்கள் இத்தனை கவனமின்றி இருந்துள்ளமையானது இவர்கள் இது போன்ற புத்தகத்தை வெளியிட்டு பூச்சாண்டு காட்டப் போகிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொண்டதை அறிந்து கொள்ளச் செய்கிறது.அதாவது தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் மக்களிடையே அதிகம் தாக்கம் செலுத்தியுள்ளது.சாய்ந்தமருது மு.காவின் .அசைக்க முடியாத அடித்தளமாக இருந்த இடம்.அங்கே மு.காவிற்கு இத்தனை சவால் என்றால் ஏனைய இடங்களை சொல்லத் தேவையில்லை.

அண்மையில் இவர்கள் சாய்ந்தமருதில் நடாத்திய பிரச்சார கூட்டத்தை  சாய்ந்தமருது மக்கள் கூச்சலிட்டு குழப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.அதே போன்று அன்சில் அணியினர் பாலமுனை மற்றும் நிந்தவூர் ஆகிய இடங்களில் நடாத்திய கூட்டங்களின் போது பல்வேறு எதிர்ப்புக்களையும் தாண்டி மக்கள் சாரை சாரையாக கலந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.இதுவெல்லாம் ஹக்கீம் காங்கிரஸ் மிக விரைவில் அழிந்து இலங்கை முஸ்லிம்களுக்கு விடிவு கிடைக்கும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.